scorecardresearch
Monday, 15 September, 2025
முகப்புஇந்தியா'அதிக ஆபத்துள்ள' உணவு வரிசையில் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர்

‘அதிக ஆபத்துள்ள’ உணவு வரிசையில் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர்

பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் உட்பட சில தயாரிப்புகளுக்கான கட்டாய இந்திய தர நிர்ணய பணியகத்தின் (பிஐஎஸ்) சான்றிதழை அக்டோபரில் நீக்கியதைத் தொடர்ந்து எஃப்எஸ்எஸ்ஏஐ இந்த முடிவை எடுத்துள்ளது.

புதுடெல்லி: இந்தியாவின் உணவு பாதுகாப்பு அமைப்பு, அனைத்து பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் மற்றும் மினரல் வாட்டரையும் ‘அதிக ஆபத்துள்ள’ பிரிவில் சேர்க்க முடிவு செய்துள்ளது, கடுமையான ஒழுங்குமுறை கட்டுப்பாடுகள் மற்றும் அவற்றின் உற்பத்தி வசதிகளை ஆண்டுதோறும் ஆய்வு செய்ய பட உள்ளன.

நவம்பர் 29 ஆம் தேதி வெளியிடப்பட்ட உத்தரவில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அதன் ஆபத்து அடிப்படையிலான ஆய்வு திட்டமிடல் கொள்கையை (RBIS) திருத்தியமைத்து, பாட்டில் குடிநீர் மற்றும் மினரல் வாட்டரை அதிக ஆபத்துள்ள உணவுப் பிரிவில் சேர்க்கிறது.

உற்பத்தியாளர்களுக்கான கட்டாய இடர் ஆய்வுகள், கண்காணிப்பு மற்றும் மூன்றாம் தரப்பு தணிக்கைகளுக்கு இந்த தயாரிப்புகளை உட்படுத்துவதற்கு இந்த உத்தரவு வழிவகை செய்கிறது. திபிரிண்டிடம் ஆர்டரின் நகல் உள்ளது.

பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் உட்பட சில தயாரிப்புகளுக்கான கட்டாய இந்திய தர நிர்ணய பணியகத்தின் (BIS-Bureau of Indian Standards) சான்றிதழ் அக்டோபரில் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பல தொழில்துறைகளில் தரநிலைகளை மேம்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் பிஐஎஸ் பொறுப்பாகும்.

இந்த பிஐஎஸ் நீக்கம் ஒரு சாத்தியமான ஒழுங்குமுறை இடைவெளியை உருவாக்கியது, இது கட்டுப்பாட்டாளரை நடவடிக்கை எடுக்கவும், உற்பத்தியின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தவும் தூண்டியது என்று எஃப்எஸ்எஸ்ஏஐ மூத்த அதிகாரி விளக்கினார். 

ஒரு மாதத்திற்கு முன்பு வரை, BIS மற்றும் FSSAI ஆல் நிறுவப்பட்ட விதிகளை உற்பத்தியாளர்கள் கடைபிடிக்க வேண்டும் என்பதால், பாட்டில் தண்ணீர் வணிகமும் விதிமுறைகளை எளிமைப்படுத்த அழைப்பு விடுத்துள்ளது என்று அதிகாரி கூறினார்.

அதன் RBIS கொள்கையில் சமீபத்திய திருத்தத்திற்கு முன், FSSAI, பால் பொருட்கள், இறைச்சி பொருட்கள் மற்றும் கோழி, மீன் மற்றும் மீன் பொருட்கள், முட்டை, தயாரிக்கப்பட்ட உணவுகள், அனைத்து வகையான இந்திய இனிப்புகள் , மற்றும் சிறப்பு ஊட்டச்சத்து நோக்கங்களுக்காக உணவு பொருட்கள் உள்ளடக்கிய 8 குழுக்களை அதிக ஆபத்துள்ள உணவுகளாக வகைப்படுத்தியது.

இந்திய வர்த்தக ஊக்குவிப்பு கவுன்சிலின் கூற்றுப்படி, இந்திய பாட்டில் தண்ணீர் சந்தையின் மதிப்பு 2023 ஆம் ஆண்டில் $3,790 மில்லியனாக இருந்தது, மேலும் 2030 ஆம் ஆண்டில் $8,922 மில்லியனை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தொழிலில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் நாட்டில் ஒழுங்கமைக்கப்படாததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

முந்தைய ஒழுங்குமுறை கட்டமைப்பு

பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கவும், பாதுகாப்பான நுகர்வை ஊக்குவிக்கவும் வடிவமைக்கப்பட்ட குறிப்பிட்ட தரங்களுக்கு இணங்குவதற்கான அடையாளமாக பிஐஎஸ் சான்றிதழ் பொதுவாகக் கருதப்பட்டாலும், மாசுபடுவதற்கான நிகழ்வுகள் பொதுவானவை என்று சில உணவு பாதுகாப்பு நிபுணர்கள் திபிரிண்டிடம் அடிக்கோடிட்டுக் காட்டினர். 

பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீரின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்வதற்காக இந்திய தரநிலை (IS) 14543 ஐ BIS உருவாக்கியுள்ளது. இந்த தரநிலையானது குடிநீர் உற்பத்தி, பேக்கேஜிங் மற்றும் விநியோகம் போன்ற பல்வேறு அம்சங்களுக்கான வழிகாட்டுதல்களை வகுத்தது, உற்பத்தியாளர்கள் பரிந்துரைக்கப்பட்ட தர அளவுருக்களை பூர்த்தி செய்வது மற்றும் பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பது அவசியம்.

அதன் பங்கில், எஃப்எஸ்எஸ்ஏஐ, பேக்கேஜ் குடிநீர் எந்தவிதமான படிவுகள், இடைநிறுத்தப்பட்ட துகள்கள் மற்றும் புறம்பான பொருட்கள் இல்லாமல் தெளிவாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது, அதே நேரத்தில் நுண்ணுயிரியல் தேவைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்-தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் (ICMR-NIN-  Indian Council of Medical Research-National Institute of Nutrition) உணவு பாதுகாப்பு நிபுணர் ஒருவர் கூறுகையில், தற்போது வரை பேக்கேஜ்களில் அடைக்கப்பட்ட தண்ணீருக்கான தயாரிப்பு விவரக்குறிப்பு அப்படியே இருந்தாலும், எஃப். எஸ். எஸ். ஏ. ஐ நடவடிக்கை முதன்மையாக சிறந்த கண்காணிப்பை உறுதி செய்யும், ஏனெனில் உற்பத்தியாளர்கள் இனி ஐ. எஸ். ஐ ஹால்மார்க்கைக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.

“சமீபத்திய மறு வகைப்பாடு மற்றும் இடர் அடிப்படையிலான ஆய்வுகள் நுகர்வோர் பாதுகாப்பை வலுப்படுத்துகிறதா மற்றும் பேக்கேஜ் நீர் துறையில் கடுமையான தரக் கட்டுப்பாட்டை பராமரிக்கிறதா என்பதை வரவிருக்கும் காலங்களில் மட்டுமே நாம் சொல்ல முடியும்” என்று உணவு பாதுகாப்பு நிபுணர் கூறினார்.

தொடர்புடைய கட்டுரைகள்